Rock Fort Times
Online News

திருச்சி மாநகர பகுதிகளில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு… * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்!

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாநகரப் பகுதிகளில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. மரக்கடையில் பொறியாளர் அணி மெய்யப்பன், காட்டூரில் பொறியாளர் அணி ஜியாவுதீன், மார்க்கெட், தாராநல்லூரில் ஏ.பி.ரகுநாதன், 21, 21 -அ, வட்டச் செயலாளர்கள் முபாரக் மற்றும் ராஜா ஏற்பாட்டில் ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. அவற்றை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு‌.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர்கள் ராஜ்முகம்மது, பாபு, நீலமேகம் , சிவக்குமார் மற்றும் மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்