தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் தந்தையும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழியின் 24-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று ( 28.08.2023 ) காலை திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பில் பொய்யாமொழியின் உருவப்படத்திற்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மேம்பாட்டு துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதனை தொடர்ந்து டிசம்பர் 17-ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டிற்கான கவுண்டவுனை துவக்கி வைத்தார். 
இந்நிகழ்வில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா தனக்கோடி, திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மண்டலக்குழு தலைவருமான மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.