திருச்சி கே.சாத்தனூர், திருவெறும்பூர் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் ( 19.08.2023 ) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி கே.சாத்தனூர் துணைமின் நிலைய பகுதிக்கு உட்பட்ட கே.கே.நகர், ஆர்.பி.எஸ். நகர், இந்தியன் பேங்க் காலனி, வயர்லெஸ் ரோடு, காஜாமலை காலனி, செம்பட்டு, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, குடித்தெரு, கிருஷ்ணமூர்த்தி நகர், பாரதி நகர், சுந்தர் நகர், காமராஜ் நகர், அய்யப்ப நகர், ஜே.கே.நகர், எல்.ஐ.சி. காலனி, சுந்தோஷ் நகர், பழனி நகர், ஆனந்த் நகர், முல்லை நகர், கே.சாத்தனூர், ஓலையூர், வடுகப்பட்டி, இச்சிகாமாலைப்பட்டி, பாரி நகர், மன்னார்புரம் ஒரு பகுதி, காஜா நகர், சிம்கோ காலனி, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளிலும், இதேபோல திருவெறும்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர், பத்தாளப்பேட்டை, நவல்பட்டு, டி.நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், கிருஷ்ணசமுத்திரம், புதுத்தெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணா நகர், சூரியூர், எம்.ஐ.இ.டி., திருவெறும்பூர் தொழிற்பேட்டை, சோழமா நகர், பிரகாஷ் நகர், பர்மா காலனி, நேரு நகர், போலீஸ் காலனி, பாரத் நகர், குண்டூர், மலைக்கோவில், கிளியூர், கக்கன் காலனி, கூத்தைப்பார், பூலாங்குடி, பழங்கனாங்குடி, காவேரி நகர், அண்ணா நகர் 100 அடிரோடு ஆகிய இடங்களில் காலை 9.45 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.