Rock Fort Times
Online News

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் பலி…!

தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் சிலர் கும்பலாகச் சென்று அப்பகுதியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். இதில், 6 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களில் கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ் (46), சேகர், ஜெகதீசன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்ததை மறுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், “உயிரிழந்தவர்களுக்கு வெவ்வேறு உடல்நல பாதிப்பு இருந்துள்ளது. அதனால் தான் அவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்