Rock Fort Times
Online News

திருச்சியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது…!

திருச்சி, இ.பி.ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இ.பி ரோடு தனியார் பள்ளி அருகே சந்தேகத்திக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அதன்பேரில் கஞ்சா விற்றதாக கிழக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (வயது19) மற்றும் இ.பி ரோடு உப்பிலிய தெரு பகுதியை சேர்ந்த பெரியசாமி (19) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல, திருச்சி பாலக்கரை தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்றதாக பாலக்கரை முதலியார்சத்திரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய செல்வகுமார் (22) என்ற வாலிபரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்