Rock Fort Times
Online News

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது…!

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசு காலனி ரெயில் நிலைய சாலை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகள் சுபலட்சுமி (வயது 26). இவர் சம்பவத்தன்று அதிகாலை திருச்சி மத்திய பஸ் நிலைய பகுதியில் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், சுபலட்சுமியின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து சுபலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சுபலட்சுமியிடம் செல்போனை பறித்து சென்றவர்கள் தென்னூர் பகுதியை சேர்ந்த அப்பாஸ் (26), அப்துல் ஹமீது (22) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தன

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்