திருச்சி உறையூர் ராமலிங்க நகர் அயோத்தியா அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். அரசு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி சுமதி. இவர் திருச்சி உறையூரில் இருந்து கீதா நகருக்கு ஒரு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர் யாரோ திருடி சென்றுவிட்டார். கழுத்தில் தாலிச் சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சுமதி இதுகுறித்து உறையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் விஜய ராகவன் வழக்கு பதிவு செய்து ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.