Rock Fort Times
Online News

110 தாசில்தார்கள் துணை கலெக்டராக பதவி உயர்வு !

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 2004-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து , அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது தாசில்தாராக பணிபுரியும் 110 நபர்களுக்கு துணை கலெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்