Rock Fort Times
Online News

பிரபல ரவுடியுடன் ஆயுதங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது…!

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரூர் மதுபான கடை அருகே ஒருவர் பட்டாக்கத்தியுடன், நான் தான் இந்த ஏரியா ரவுடி என்று அசிங்கமாக திட்டிக்கொண்டு இருப்பதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 94874 84651 என்ற செல்போன் எண்ணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் உத்தரவிட்டதன் பேரில், ஜீயபுரம் காவல்துறையினர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா, கோப்பு கீழத் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் பிரசாந்த்(20) என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில், சோமரசம்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான கோப்பு நாகராஜ் என்பவரது பெயரில் சமூக வலை தளங்களில் ஆயுதங்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு அவருக்கு துதிபாடும் வேலைகளில் ஈடுபட்டதும், மறைமுகமாக பல்வேறு வழிகளில் அவருக்கு உதவிகள் செய்து வந்ததும் தெரிய வருகிறது. அதன்பேரில், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்