திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மற்றும் பொன்மலை மண்டலங்களை சேர்ந்த சாரண சாரணியர்களுக்கு சுவர் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. ஏழு வயது முதல் 24 வயது வரை உள்ள சாரண சாரணியர்களுக்கு இந்த போட்டி நடத்தப்பட்டது. போட்டியை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், கோட்ட மூத்த இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார், தொழிலாளர் நல அதிகாரி சுவாமிநாதன் உள்ளிட்டவர்கள் தொடங்கி வைத்தனர். “கிரீன் இந்தியா, கிளீன் இந்தியா” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு சாரண சாரணியர்களின் பயிற்சி மையத்தில் அமைந்துள்ள சுற்றுப்புற சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 47 சாரண சாரணியர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கைவண்ணத்தை வெளிப்படுத்தினார்கள். மேலும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி கோட்ட சாரண சாரணியர்கள் படையின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.