திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் வாஞ்சிநாதன் (35) ஆம்புலன்ஸ் வைத்து தொழில் செய்து வரும் இவர் நம்பர் ஒன் டோல்கேட் ஒய்ரோடு அருகே உள்ள தனது அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை மாயமாகியிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாஞ்சிநாதன் அலுவலக சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது நேற்று அதிகாலை 3.25 மணிக்கு ஊதா நிறம் சட்டை, கயிலி அணிந்த நபர் ஒருவர் ஆம்புலன்ஸ் அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை திருடிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசில் வாஞ்சிநாதன் புகார் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான நபரை வலைவீசி தேடி வருகின்றனர் .
Comments are closed, but trackbacks and pingbacks are open.