Rock Fort Times
Online News

திருச்சி திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் திடீர் மாற்றம்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் பகுதியில் சட்ட விரோதமாக சிலர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்துவதாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் பிரியா, காவலர்களை சம்பவ இடத்திற்கு அனுப்புவதில் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாட்டு வண்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், காவல் ஆய்வாளர் பிரியாவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்