பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மானாமதுரை- ராமநாதபுரம் பிரிவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி – ராமேஸ்வரம்,
ராமேஸ்வரம்-திருச்சி விரைவு ரயில்களானது (16849, 16850) இன்று ஜூலை 1 முதல் 31-ம் தேதி வரை (வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர) மானாமதுரை – ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களானது பாம்பன் பால பராமரிப்புப் பணி காரணமாக ஏற்கனவே ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.