2023 – 24ம் ஆண்டிற்கான திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞா்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் , திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் நேற்று ( 29.07.2023 ) நடைபெற்றது. இதில் தலைவராக வழக்கறிஞா் முல்லை சுரேஷ் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் அதிமுக பிரமுகா் ஆவாா். துணைத்தலைவர்களாக வழக்கறிஞா்கள் சசிக்குமார், இரா.பிரபு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இரா.பிரபு நாம் தமிழா் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளராக உள்ளாா். செயலாளர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வழக்கறிஞா் வெங்கட் தேர்வு செய்யப்பட்டார். இவா் இதே பதவியில் ஏற்கனவே 2 முறை இருந்துள்ளாா். தற்போது 3வது முறையாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். சங்கத்தின் புதிய நிர்வாகிகளை சக வழக்கறிஞா்கள் சந்தித்து வாழ்த்து கூறினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.