Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி இன்ஜினீயரிடம் கத்தி முனையில் பணம் பறித்த வியாபாரி கைது…!

திருச்சி உறையூர் சின்ன செட்டி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 41). பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி உறையூர் காந்திபுரம் பகுதியில் புதிய ரேஷன் கடை ஒன்று திறக்கப்பட்டது. அங்கு விளம்பர பலகையும் வைக்கப்பட்டு இருந்தது .அங்கு வந்த கோவிந்தராஜ் மது போதையில் ரேஷன் கடை விளம்பர பலகையை சேதப்படுத்தினார். பின்னர், அவ்வழியாக வந்த திருச்சி மாநகராட்சி மண்டல இளநிலை பொறியாளர் ரமேஷிடம் கத்தி முனையில் மிரட்டி பணத்தை பறித்து சென்று விட்டார்.

இதுகுறித்து இளநிலை பொறியாளர் ரமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்கு பதிந்து கோவிந்தராஜை கைது செய்தார். அவரிடம் இருந்து பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்