Rock Fort Times
Online News

பராமரிப்புப்பணி காரணமாக திருச்செந்தூர் அதிவிரைவு ரயில் பகுதியாக ரத்து…

ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் அதிவிரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில், மதுரை கோட்டத்தில் செய்துங்கநல்லூர்- ஸ்ரீவைகுண்டம் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் அதிவிரைவு ரயிலானது (20605) ஜனவரி 1 முதல் 5 ஆம் தேதி வரை திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, திருச்செந்தூர்- சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயிலானது (20606) ஜனவரி 1 முதல் 5 ஆம் தேதி வரை திருச்செந்தூர் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருநெல்வேலியிலிருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்