திருச்சி, வயலூர் மெயின்ரோடு சீனிவாசநகர் 3வது மெயின்ரோட்டில் தில்லை மெடிக்கல் சென்டரின் திறப்புவிழா இன்று ( 30-06-2024 ) நடைபெற்றது. விழாவில்,
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய மெடிக்கல் சென்டரை திறந்து வைத்தார். திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜூலு,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்திருந்தவர்களை திருச்சி, தில்லை மெடிக்கல்ஸ் நிர்வாக இயக்குனரும், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான தில்லை.ஆர்.மனோகரன் மற்றும் டாக்டர் கே.எம்.ரோஷன்ராஜ் ஆகியோர் வரவேற்றனர். 24 மணி நேரமும் செயல்படும் தில்லை மெடிக்கல் சென்டரில் பிசியோதெரபி, எக்ஸ்ரே நவீன ஆய்வகம், விசாலமான கார் பார்க்கிங் வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.
விழாவில், திருச்சி மத்திய மாவட்ட திமுக துணைச்செயலாளர் தி.முத்துச்செல்வம், பொன்னகர் பகுதிச் திமுக செயலாளர் மோகன்தாஸ், திமுக பிரமுகர்கள் புத்தூர் தர்மராஜ், பவுல்ராஜ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசுத்துறை அதிகாரிகள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.