திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கலைஞர் அறிவாலயம் அருகே நேற்று முன்தினம் இரவு 1.30 மணி அளவில் வாலிபர் ஒருவர் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண் டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் அவரது செல்போனை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் அவர்களிடமிருந்து தப்பி ஓடி சத்திரம் பேருந்து நிலையத்தில் போலீஸ் பீட்டில் பணியிலிருந்த போலீசாரிடம் தெரிவித்தார். உடனே அந்த வாலிபர்களை போலீசார் விரட்டி சென்றனர். அவர்கள் அண்ணா சிலை அருகே ஓடிய போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட கோட்டை போலீஸ்காரர் அப்துல்காதர்(35) அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றார். அப்போது அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவன், கையில் வைத்திருந்த கத்தியால் அப்துல்காதரின் கழுத்து மற்றும் கை ஆகிய இடங்களில் வெட்டி வெட்டு தப்பி ஓடி விட்டனர். காயமடைந்த போலீஸ்காரர் அப்துல் காதர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த புலி சரவணன் (21), சாரதி (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர் . பின்னர் அவர்களை
திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...
1
of 986

Comments are closed.