சிவகங்கை மாவட்டம் முத்துப்பேட்டை கீழக்குளத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் என்கிற கர்லா ரமேஷ்(வயது24). இவரை திருட்டு வழக்கு தொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீசார் அழைத்து வந்து கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட டிவிஎஸ் நகர் புறக்காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
அப்போது கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ரமேஷ் குமார் புறக்காவல் நிலையத்திலிருந்து வெளியே சாவியுடன் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டார். அவரை கே.கே.நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.