Rock Fort Times
Online News

மூன்றாவதும் பெண் குழந்தை என்று ஜோசியர் சொன்னதை கேட்டு கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி மரணம்…! 

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமாா். இவரது மனைவி பிரியா ( வயது 31). இவா்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் பிரியா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று ஜோசியரிடம் பிரியா கேட்டுள்ளார். அதற்குஇந்த குழந்தையும் பெண் என்று ஜோசியம் பார்த்தவர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால்,  ஏமாற்றம் அடைந்த பிரியா, துறையூரை சேர்ந்த  ஒரு பெண்ணிடம் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அதிக ரத்தப்போக்கு காரணமாக பிரியா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்