Rock Fort Times
Online News

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு வலை…!

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 17 ஆம் தேதி மாலை தன் வீட்டருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் ஒருவர் சிறுமியை அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கோட்டை மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்