வேலை தேடுவோருக்கு “சூப்பர் சான்ஸ்”- திருச்சியில் பிப். 28-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…!
திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், வருகிற 28ம் தேதி ( வெள்ளிக்கிழமை) திருச்சியில் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்கின்றனர். மேலும், இலவச திறன் பயிற்சிக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இந்த முகாமில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள 10, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத் திறனாளிகள் சுயவிவரக்குறிப்பு, கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0431-2413510, 94990-55901, 94990- 55902 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.