Rock Fort Times
Online News

திருச்சியில் ‘ஹேப்பி சாலை’ என்ற பெயரில் ஞாயிறு கொண்டாட்டம் !

வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பல்வேறு நிலையில் உள்ளவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சமீபத்தில் சென்னை, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் காவல்துறை சார்பாக ‘ஹேப்பி சாலை’ என்ற பெயரில் ஞாயிறுதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதேபோல, திருச்சியிலும் இன்று (23-7-23) ‘ஹேப்பி சாலை’ நிகழ்ச்சி தொடங்கியது. திருச்சி காவல்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் திருச்சி நீதிமன்ற சாலை அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலை முன்பு நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது.

இதனை அமைச்சர்கள் கே.என்.நேரு , அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா, மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஆடல் பாடல்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவை இடம் பெற்றது. இதில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்