Rock Fort Times
Online News

திருச்சியில் முன்விரோதத்தால் அரிவாள் வெட்டு! இருவர் கைது!

திருச்சி, காந்தி மார்க்கெட், எடத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது45). இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த சரித்திரபதிவேடு ரவுடியான அன்சாரி (வயது26) மற்றும் சன்ஜய் (வயது23) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், இன்று அன்சாரி, சஞ்சய் ஆகிய இருவரும் சரவணனை அரிவாளால் வெட்டி, கற்களால் தாக்கியுள்ளனர். காயமடைந்த இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் தாக்குதலில் ஈடுபட்டை அன்சாரி மற்றும் சன்ஜயை கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்