திருச்சி பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் பாலக்கரை கெம்ஸ்டவுண் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 5 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு அமர்ந்து இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அவர்களில் ஒருவர் பிடிபட்டார். 4 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் செங்குளம் காலனியைச் சேர்ந்த சரத்குமார் என்பதும், தப்பி ஓடியவர்கள் தினேஷ், ஹரி, தனுஷ், அண்ணாமலை என்பதும் அவர்கள் கும்பலாக அமர்ந்து போதை மாத்திரைகள் விற்றதும் தெரிய வந்தது. அதன்பேரில் சரத்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த
9 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன . தப்பி ஓடிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 969
Comments are closed.