Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி சார்பில் குடியரசு தின விழா- மேயர் கொடி ஏற்றினார்…

திருச்சி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மரு. இரா.வைத்திநாதன், துணைமேயர் ஜி.திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில், மாநகராட்சியில் மாசற்ற முறையில்
25 ஆண்டுகள் பணி நிறைவுசெய்த 19 நபர்களுக்கு ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தேசிய அளவிலான கணக்கெடுப்பு ஸ்வச் சர்வேக்ஷன் 2023 ன்படி தமிழகத்தின் தூய்மையான நகரமாக திருச்சி மாநகரம் முதல் இடம் பெற்றதற்கு சிறப்பான முறையில் பொது சுகாதார பணிகளை மேற்கொண்ட 25 நபர்களை கௌவுரவித்து கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நண்பர்கள் சிலம்பாட்டம் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மேயர் மு.அன்பழகன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதோடு காந்தி மார்க்கெட் முன்புறம் உள்ள போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாநகராட்சி நகரப்பொறியாளர் ப.சிவபாதம், நகர்நல அலுவலர் த.மணிவண்ணன், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பு.ஜெயநிர்மலா, துணை ஆணையர் நாராயணன், செயற் பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்