Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம், தா.பேட்டை பகுதிகளில் நாளை “பவர் கட்”…!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் மற்றும்  தா.பேட்டை பகுதிகளில் நாளை(23-07-2024) மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக
ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில் நிலைய சாலை, கிழக்கு உத்தர வீதி, மேற்கு உத்தர வீதி, வடக்கு உத்தர வீதி, தெற்கு உத்தர வீதி மற்றும் சித்திரை வீதிகள், அடையவளஞ்சான் தெருக்கள், பெரியார் நகர், மங்கம்மா நகர், அம்மா மண்டபம் சாலை, மாம்பழச்சாலை, வீரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.  அதேபோல   தா.பேட்டை, பிள்ளாதுறை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவனூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சப்பெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர்புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜா  பாளையம், லட்சுமணபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்கலம் ஜம்புநாதபுரம், திருத்தலையூர், ஆர்.கோம்பை,
இ.பாதர்பேட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்