Rock Fort Times
Online News

பொது இடங்களில் உள்ள கட்சி கொடிக்கம்பங்களை ஏப்.21ம் தேதிக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும்- ஐகோர்ட் இறுதி “கெடு”…!

பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப் 21ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி, மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் மதுரை கிளை ஜனவரி 27-ம் தேதி அன்று உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவின்படி தமிழகத்தில் தேசிய, மாநில, உள்ளாட்சி அமைப்பு ரோடுகளில் உள்ள தங்கள் கட்சி கொடி கம்பங்களை அகற்ற தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தி இருந்தார்.  இந்நிலையில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ், ‘ராயபுரத்தில் நடை பாதையில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பத்தையும், கல்வெட்டையும் அகற்ற உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (மார்ச் 27) விசாரணைக்கு வந்தபோது, கொடிக்கம்பங்கள் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ‘பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப் 21ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் ஏப்ரல் 21ம் தேதிக்குள் அகற்றாவிட்டால், வழக்கு தொடரலாம்’ என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்