திருச்சி மாவட்டம், லால்குடி ஆங்கரை கே.என். ராசி நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத் (வயது 39). இவர் பல்வேறு நிறுவனங்களின் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் ஏஜென்சி நடத்தி வந்தார். இதற்காக அவரது வீட்டின் அருகாமையில் குடோன் அமைத்திருந்தார். ஆனால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருண்பிரசாத், தனது குடோனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி கலைவாணி லால்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருண் பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.