முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருத்தரங்கம்…! * அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் விழா, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக அரிமா 72 என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாநகர திமுக சார்பாக மாபெரும் கருத்தரங்கம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மாநகர அவைதலைவர் நூர்கான் வரவேற்றார். கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமை தாங்கி பேசினார். கருத்தரங்கத்தை தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர் கருத்தரங்கத்தில் பட்டிமன்ற பேச்சாளர்கள் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர், புலவர் சண்முகவடிவேல், செல்வி.சமிதா பாண்டியன் ஆகியோர் பங்கேற்று பேசினர். முடிவில் மாநகர துணைச் செயலாளர் ஆறு.சந்திரமோகன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.சேகரன், சபியுல்லா, கவிஞர் சல்மா, செந்தில், திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட, மாநகரக் கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.