Rock Fort Times
Online News

திருச்சியில் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து – 2பேர் பலி

சென்னையில் இருந்து கம்பம் நோக்கி சென்ற ஆம்னி சொகுசு பேருந்து திருச்சி அருகே லாரி மீது மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு – 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் கோட்டை காவல் நிலையம் போலீசார் விசாரணை. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பால்பண்ணை அருகேயுள்ள மேம்பாலத்தில், சென்னையிலிருந்து கம்பம் நோக்கி 34 யணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து வந்துகொண்டிருந்தது. முன்னால் தர்மபுரியில் இருந்து, புதுக்கோட்டை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்னி பேருந்து மோதியது.

இவ்விபத்தில்,பேருந்து ஓட்டுனரான சந்திரன் மற்றும் பேரனுடன் பயணித்த மூதாட்டி பழனியம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகள் சிக்கி சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்