திமுகழக சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாநில துணைச் செயலாளராக திருச்சி உறையூர் ராமலிங்க நகரை சேர்ந்த கே.அன்வர் அலி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இவர், ஏற்கனவே சிறுபான்மையினர் நலப்பிரிவு திருச்சி மாவட்ட அமைப்பாளராக சிறப்பாக பணியாற்றினார். இதன் காரணமாக தற்போது மாநில அளவில் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் தன்னை நியமித்த முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர்களை வழிநடத்தி செல்லும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார். கழக சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட அன்வர் அலியை கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.