அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகள் வீசும் விமர்சன பந்துகளுக்கு, பதில் கருத்துகளால் தங்கள் கட்சியினர் பவுண்டரி அடிப்பதைப் பார்த்தே பழக்கப்பட்ட திமுக தொண்டர்கள், நேற்று ( பிப்.15 ) அக்கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் “தலைவர் 72” என்கிற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியை பார்த்து வாயடைத்து போய் விட்டனர்.
அதிகார யுத்தம், கோஷ்டி பூசல், பதவி பாகுபாடு என எதுவும் இல்லாமல் தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இடையே நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில், அனைவரும் ஒற்றுமையாக விளையாடியது திமுகவில் மிகப்பெரிய மாற்றமாகவும், தொண்டர்களுக்கான உத்வேக செயலாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் திமுகவின் இந்த புதிய முயற்சியான, கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான கரு… திருச்சி தெற்கு மாவட்ட அமமுக ஐடி விங் செயலாளரான தரூண் உருவாக்கியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. நேற்றைய தினம் திராவிட முன்னேற்ற கழக அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டிக்கான அடித்தளத்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் அமைத்து விட்டது. திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளராக பி.செந்தில்நாதன் பொறுப்பேற்றபின், 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சி நிர்வாகிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டியை தரூண்தான் முன்னின்று நடத்தினார். அதன்படி கட்சியின் மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் என அனைவரும் பல்வேறு அணிகளாக பிரிக்கப்பட்டு கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினர். அவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பையும், கொடைக்கானலுக்கு இன்ப சுற்றுலாவுக்கான ஏற்பாட்டையும் திருச்சி மாநகர் மாவட்ட அமமுகவே செய்திருந்தது. தனக்கு மேல் உள்ள கட்சி பொறுப்பாளர்களிடம் தங்கள் கோரிக்கையை மனம் விட்டு பேசவே தடுமாறிய அமமுகவினருக்கு, கட்சி நடத்திய கிரிக்கெட் போட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன்பிறகு திருச்சி மாநகர் மாவட்ட அமமுகவினர், தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து கட்சியின் வளர்ச்சிக்கு சிறப்பாக உழைத்து வருகின்றனர். லட்சக்கணக்கான தொண்டர்கள் பலம், வலுவான அரசியல் கட்டமைப்பு, சமூக நீதி, மாநில சுயாட்சி உள்ளிட்ட பல விஷயங்களில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழும் திமுக, திருச்சி தெற்கு மாவட்ட அமமுக ஐடி விங் செயலாளர் தரூணிண் ஸ்மார்ட் ஐடியாவை தற்போது கையில் எடுத்துள்ளது. இதைப்பார்த்த அமமுகவினர் தரூண் பேஸ்புக் அக்கவுண்ட்டில் அவரது பெயர் மட்டும் “தருண் ஸ்மார்ட்” அல்ல… அவரும், இவரது ஐடியாவும் ஸ்மார்ட்தான் என தருணை புகழ்ந்து வருகின்றனர்.

Comments are closed.