சென்னை மணலி ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ், மணலி மஞ்சம்பாக்கத்தில் உள்ள சுங்கச் சாவடியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் வழக்கம்போல கண்டெய்னர் லாரிகள் வருவதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மணலி புதுநகரில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வேகமாக மாற்று பாதைக்கு வருவதை கண்ட அவர் அந்த லாரியை தடுத்து நிறுத்த முற்பட்டார். அப்போது அதன் டிரைவர் லாரியை வேகமாக திருப்பும் போது ஜெயபிரகாஷ் டயருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், போலீசார் மணலி புதுநகர் வரை இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது கண்டெய்னர் லாரி வேகமாக வருவதை அறிந்து மடக்கி பிடித்து அதன் டிரைவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. மாற்றுப்பாதையில் செல்ல முயன்ற போது காவலாளி மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.