திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஆமூர் கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்த மலையாளி மகள் சங்கவி( வயது 20). இவர் தொட்டியம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதலியை பார்க்க அந்த வாலிபர் ஆமூர் வந்தார். அப்போது அவரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர், எதற்காக எங்கள் தெருவுக்குள் வருகிறாய் என்று கேட்டு அவரை அடித்ததாகவும், அதற்கு சங்கவி என்னைத்தான் பார்க்க வந்தார், நாங்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறியும், அதைக் கேட்காமல் அந்த வாலிபரை அவர்கள் மீண்டும் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சங்கவி தனது வீட்டில் இன்று ( 06.06.2023 ) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சங்கவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாத்தலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.