திருச்சி மாவட்டம், வளநாட்டை சேர்ந்தவர் பிச்சை (வயது 65). கொத்தனாரான இவருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள். இதில் வித்யா, காயத்ரி ஆகிய 2 பேரும் காங்கேயத்தில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அப்போது அவர்கள் காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். மகள்களின் காதல் விவகாரம் குறித்த தகவல் அறிந்த பிச்சை அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் மனமுடைந்த சகோதரிகள் இருவரும் இன்று ( 06.06.2023 ) வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சகோதரிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சகோதரிகள் காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.