Rock Fort Times
Online News

கடன் நெருக்கடியில் ஜவுளிக்கடை உரிமையாளர் மாயம் !

திருச்சி மாவட்டம் முசிறி அந்தாரப்பட்டி ரோடு பாரிவள்ளல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து வயது 58. இவர் முசிறி பஸ் நிலையப் பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் முசிறி முருகன் நகர் பகுதியில் புது வீடு கட்டினார். இதற்கு சில லட்சங்கள் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தொழில் நெருக்கடி காரணமாக கடன் தவணைத் தொகையை அவரால் சரியாக செலுத்த இயலவில்லை. இந்த நிலையில் வீட்டில் மனைவி குழந்தைகள் இரவு தூங்கி கொண்டிருந்தபோது நள்ளிரவில் வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது மகன் தனுஷ் முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்