Rock Fort Times
Online News

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் டிஜிபி மேல் முறையீடு வழக்கில் 12ம் தேதி தீர்ப்பு…!

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு இடத்தில் இருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்போதைய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி.கண்ணன் ஆகிய இருவர் மீது விழுப்புரம்
சி.பி.சி.ஐ டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் கடந்த ஜூன் 16ம் தேதி நீதிபதி புஷ்பராணி தீர்ப்பு வழங்கினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20,500 அபராதம் விதித்திருந்தார். அவருக்கு உடந்தையாக இருந்த எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ்தாஸ், கண்ணன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த கோர்ட் சம்பந்தப்பட்ட விழுப்புரம் மாவட்ட நீதிமன்றமே மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்பேரில், இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 4 மாதங்களாக மீண்டும் நடத்தப்பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் வருகிற 12-ஆம் தேதி மேல் முறையீட்டு மனு மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்