Rock Fort Times
Online News

திருச்சியில் மீன் வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு – 3 வாலிபர்கள் கைது…

திருச்சி பீமநகர் கூனிபஜார் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 30). இவர் முதலியார் சத்திரம் டீக்கடை அருகில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது கடைக்கு வந்த 3 ஆசாமிகள் மாசிலாமணியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1200 பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். இதுகுறித்து பாலக்கரை போலீசில் மாசிலாமணி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சுற்றி திரிந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் கீழ சேகரகுடியை சேர்ந்த ஓம் முருகன் (23), நாகை மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீசன் (24), மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சண்முகராஜா ( 35) என்பதும்,
இவர்கள் 3 பேரும் மாசிலாமணியிடம் கக்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில், ஓம்முருகன் மீது புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்