திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த மகாமுனி (45), கடந்த வாரம் பழனிக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தார். ஒட்டன்சத்திரம் அருகே சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை உடன் சென்றவர்கள் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(19-03-2024) காலை உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான தொட்டியத்தை அடுத்துள்ள தோளூர் பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. விபத்தில் உயிரிழந்த மகாமுனிக்கு ஆனந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.