திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் உந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை ஆகிய பகுதிகளில் நாளை (23.06.2024) ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது. 24ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed.