Rock Fort Times
Online News

திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் தூர் வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9-ம் தேதி ஆய்வு..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 9-ம் தேதி திருவாரூர், தஞ்சை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இந்த நிலையில் இன்று ( 06.06.2023 ) திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ,லால்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு ஆய்வு செய்தார். லால்குடி வட்டம், காணக்கிளியநல்லூர் கிராமத்தில் நந்தியாற்றின் குறுக்கே நீர்வளத்துறை சார்பில் ரூ. 10 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளையும் அமைச்சர் கே.என். நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ், சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்