விருதுநகர் மாவட்டம், சிவகாசி சீதக்காதி நாடு தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜாபர் (27). இவர் திருச்சி, தென்னூர் குவைது இ மில்லத் நகரில் தங்கியிருந்து பாலக்கரையில் உள்ள ஒரு பிரபல பிரியாணி கடையில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி அப்துல்ஜாபர், மாடியில் நின்றவாறு செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அப்துல் ஜாபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் அளித்த புகாரின்பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.