Rock Fort Times
Online News

எமனாக மாறிய செல்போன்: திருச்சியில் மாடியில் இருந்து தவறி விழுந்த பிரியாணி மாஸ்டர் உயிரிழப்பு…!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சீதக்காதி நாடு தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜாபர் (27). இவர் திருச்சி, தென்னூர் குவைது இ மில்லத் நகரில் தங்கியிருந்து பாலக்கரையில் உள்ள ஒரு பிரபல பிரியாணி கடையில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி அப்துல்ஜாபர், மாடியில் நின்றவாறு செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அப்துல் ஜாபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் அளித்த புகாரின்பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்