Rock Fort Times
Online News

ஓடும் பஸ்ஸில் டிரைவர்-கண்டக்டரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு…!

திருச்சி செந்தண்ணீர்புரம் முத்துமணிடவுன் பகுதியில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் குமரவேல் (வயது 44) ஓட்டினார். கண்டக்டராக காமராஜ் என்பவர் பணியாற்றினார். காந்தி மார்க்கெட் அருகே பஸ் சென்ற  போது 2 வாலிபர்கள் பஸ்சில் ஏறினர். டிக்கெட் எடுப்பது தொடர்பாக அவர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரத்தில் கண்டக்டரை அவர்கள் இருவரும் தாக்கினர். இதனை தட்டிக் கேட்ட டிரைவர் குமரவேலையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் பஸ் டிரைவர் குமரவேல் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்