சிவகாசி மற்றும் விருதுநகர் பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்குள்ள பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வருகிறது. இதே போல, விருதுநகர் மாவட்டம் பனையப்பட்டி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று (15-12-2023) வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் ( வயது 40 ) வேலை செய்து வந்தார். வழக்கம் போல இன்று காலை அவர் வெடி மருந்து கலக்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இந்த விபத்தில் சண்முகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் உயிரிழந்த சண்முகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.