விலைவாசி உயர்வு மற்றும் ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க.அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.சார்பில் இன்று (20.07.2023) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல, திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் கட்சியின் செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி. ப.குமார், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, மாநகர் மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, பூனாட்சி, அண்ணாவி, முன்னாள் எம்.பி.ரத்தினவேல், முன்னாள் அரசு கொறடா மனோகரன், ஆவின் தலைவர் கார்த்திகேயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், இந்திராகாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.