Rock Fort Times
Online News

மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு…

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில் வசிப்பவர் அழகன். இவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வீடு கட்டி குடியேறினார். வீட்டின் அருகிலேயே ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான குடிநீர் தொட்டி இருக்கும் நிலையில் இவருக்கு கடந்த 8 ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், விரக்தி அடைந்த அவர், அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று தனக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்றால் கீழே குறித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். தகவல் அறிந்த ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவரது இல்லத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்குவதாக தெரிவித்ததன்பேரில் கீழே இறங்கி வந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்