Rock Fort Times
Online News

மணப்பாறையில் மின்கம்பத்தில் பேருந்து மோதி கவிழ்ந்தது; 8 பேர் காயம்

சென்னையில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் கம்பம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று காலை திருச்சி –திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த மரவனூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அங்கு மேம்பால பணிகள் நடைபெறுவதால் அதனை கவனிக்காமல் அருகில் வந்து திடீரென் திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த சிறுபாலத்தின் தடுப்புக்கட்டையில் மோதி அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கம்பத்தில் பேருந்து மோதியதில் மின்கம்பம் பாதி சாய்ந்த நிலையில் நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்