Rock Fort Times
Online News

தமிழகத்தில் இந்தியை திணிக்க முற்படும் மத்திய அரசை கண்டித்து பிப்.25-ந்தேதி திமுக சார்பில் போராட்டம்…!

தி.மு.க. மாணவர் அணி மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று(21-02-2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் குறிப்பாக, மதத்தின் பெயரால் பிற்போக்குச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அரசின் சதி திட்டத்தை முறியடிக்க பகுத்தறிவுப் பிரசாரம் மேற்கொள்வது. மத்திய கல்வி அமைச்சரின் ஆணவப் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு தமிழ்நாட்டின் கல்வி நிதியை வழங்கும் வரையில் தமிழ்நாடு முழுவதும் தொடர் மாணவர் போராட்டம், இந்தியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக 25-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்