திருச்சி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலம் பத்திரப்பதிவு- பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பாய்ந்தது…!
திருச்சி கொள்ளிடம் கரை சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற ஆறுமுகம் (வயது 59). இவர் கடந்த 2018ம் ஆண்டு மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேரிடம் அந்த பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான நிலத்தை வாங்கினார். இதற்கான பத்திரப்பதிவு ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. இந்தநிலையில் இவர்கள் 4 பேரும் ஆறுமுகத்துக்கு விற்பனை செய்த நிலத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து வேறு நபருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆறுமுகம் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில் நான்கு பேர் மீது ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.